மின்சாரம் தாக்கி பெண் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் மனைவி ராதா (35) கப்பலூரில் தனியார் மில்லில் வேலை பார்த்தார். இவரின் கணவர் ஆனந்த் வெளியூரில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று (அக். 16) காலை பாத்ரூம் சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி ராதா உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் தனலட்சுமி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :