திமுக பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு

by Staff / 23-06-2024 01:49:54pm
திமுக பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கேட்ட தாழ்த்தப்பட்ட பெண்களை தாக்கிய திமுக பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலை தடுக்க முயன்ற பெண்ணின் மகனை துப்பாக்கியால் சுட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து புகார் அளித்த நிலையில், திமுக பஞ்சாயத்து தலைவர் தங்க தமிழ்செல்வன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via