பிரதமர் வீடு கட்டும் திட்டம் - ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு

by Staff / 17-10-2024 04:58:11pm
பிரதமர் வீடு கட்டும் திட்டம் - ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படுகிறது. தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் ரூ.68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடு கட்ட மத்திய அரசு 60%, மாநில அரசு 40% நிதி வழங்குகின்றன.

 

Tags :

Share via