மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்தவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

by Editor / 27-12-2022 02:15:56pm
மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்தவனுக்கு இரட்டை  ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம்  பகுதியில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தையை கொலை செய்த  வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று(26.12.2022) இவ்வழக்கை விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளியான  வெங்கடேசன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8 கொலை வழக்கு  குற்றவாளிகளுக்கும்,2 போக்சோ வழக்கின் குற்றவாளிகளுக்கும்,1 கற்பழிப்பு வழக்கின் குற்றவாளிக்கு என மொத்தம் 11 ஆயுள் தண்டனைகளை  தென்காசி மாவட்ட காவல் துறையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via