செல்போன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்

by Staff / 22-01-2024 12:10:59pm
செல்போன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்

உத்திர பிரதேச மாநிலத்தில் செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி காமினி திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்துப் பார்த்ததில் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும் அவர் மாரடைப்பால் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சிறுமியின் உயிரிழப்பிற்கு உண்மையான காரணத்தை அறிய உடலை உடற்கூறாய்விற்கு சிறுமியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். குளிர்காலத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் குறைந்ததும் காரணமாக இருக்கலாம் மருத்துவர்கள் கூறினர்.

 

Tags :

Share via