மாஜிஸ்திரேட் நீதிமன்ற உதவி அரசு வக்கீல் தற்கொலை

by Staff / 22-01-2024 12:06:50pm
மாஜிஸ்திரேட் நீதிமன்ற உதவி அரசு வக்கீல் தற்கொலை

கேரளாவின் கொல்லம் பரவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உதவி அரசு வழக்கறிஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். வழக்கறிஞர் அனிஷியாவின் (41) சடலம் பரவூர் நெடுங்கோளத்தில் உள்ள வீட்டின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது. கணவர் அஜித்குமார் மாவேலிக்கரை நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். வேலை காரணமாக அனிஷியா கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாக உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories