பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

by Staff / 04-02-2024 11:35:47am
பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

சிலி நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. அதிக வெப்பநிலைக்கு மத்தியில், சிலியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரிகிறது. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிபர் போரிக் கேப்ரியல் தெரிவித்தார். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். சுமார் 1,100 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. வால்பரைசோ மாகாண பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via