அரசியல் தலைவருக்கு நரகம் கிடைக்க சாபம் நடிகை கைது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நரகம் காத்திருக்கிறது என்று விமர்சித்த நடிகையே மராட்டிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மராத்திய மொழி படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நடிகை கேதகி சிதலே அவ்வப்போது சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். மகாராஷ்டிர மாநிலத்தின் சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து முகநூலில் மராட்டிய நடிகை கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த. பிராமணர்களை வெறுப்பதால் சரத்பவாருக்கு நரகம் காத்திருப்பதாக அந்த பதிவில் கூறியிருந்தார். இது தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் தூண்டுதலின்பேரில் நடிகை இந்தக்கருத்தை கூறியதக குற்றம் சாட்டப்பாடுள்ளது . இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளிடம் புகாரைபெற்ற போலீசார் நடிகை கேதகி சிதலே சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.
Tags :