காலையில் திருமணம் மாலையில் தற்கொலை கட்டாய திருமணம் மணப்பெண் விபரீதம்

by Staff / 15-05-2022 02:22:59pm
காலையில் திருமணம் மாலையில் தற்கொலை கட்டாய திருமணம் மணப்பெண் விபரீதம்


தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சி மணமகன் உடன் மனமகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணம் முடிந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் தோட்டா பகுதியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் ஆனந்தப் ஊரைச் சேர்ந்த மல்லிகா ராஜன் ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது முன்னதாக இரவு திருமணம் சடங்குகள் மற்றும் பாட்டு கச்சேரி நடன நிகழ்ச்சிகள் ஆகிய திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றன அப்போது நடன நிகழ்ச்சியில் மணமகன் மல்லிகார்ஜுனா உடன் இணைந்து மணப்பெண் லட்சுமி மகிழ்ச்சியுடன் நடனமாடினார் இது தொடர்ந்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது மாலையில் கழிவறைக்கு சென்ற மணப்பெண் லட்சுமி நீண்ட நேரமாக வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து திறந்தனர் அப்போது லட்சுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே லட்சுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் தகவல்  அறிந்த பத்தப்ப போலீசார் லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் முதல்கட்ட விசாரணையில் லட்சுமி தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்றும் கூறிய நிலையில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும் அதனால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது

 

Tags :

Share via