டியூஷன் சென்டருக்கு சென்ற மாணவி பலி - டியூஷன் டீச்சர் கைது
பெங்களூருவில் 6ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.மாண்டியா மாவட்டத்தில் மளவள்ளி டவுனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுரேஷ், அஸ்வினி தம்பதிகளின் மகள் திவ்யா (10) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டியூஷன் செல்வதாக கூறிச்சென்ற சிறுமி மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், டியூஷன் சென்டருக்கு அருகே கட்டுமானம் நடக்கும் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட டியூஷன் ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :