எல்லையில் ஆளில்லா விமானத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மீண்டும் இந்திய எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்றிரவு பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானத்தை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், எல்லைப் பகுதிகளில் சோதனை செய்தபோது, குர்தாஸ்பூரில் பாதுகாப்பான இடத்தில் ஒரு பார்சலை வீரர்கள் கண்டுபிடித்தனர். அதில், 4 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்தன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :