அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் இனி அரசுப் பணி அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசு பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்கள் இறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும். இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
Tags :