சுற்றுலா பயணிகளை குறிவைத்து பதநீர் சீசனே இல்லாத காலகட்டத்தில் கலப்பட பதநீர் விற்பனை.

by Editor / 20-11-2023 09:06:40am
சுற்றுலா பயணிகளை குறிவைத்து பதநீர் சீசனே இல்லாத காலகட்டத்தில் கலப்பட பதநீர் விற்பனை.

 குற்றாலத்தில் சீசன் காலங்கள் இல்லாத பிற காலங்களிலும் குற்றாலம், பழைய குற்றாலம், புலியரை, கோட்டைவாசல் குத்துக்கல்வலசை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வாகனங்களில் வட மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளையும் பொதுமக்களையும் குறிவைத்து பதநீர் வியாபாரம் நடைபெற்று வருகின்றது.பதநீர்  சீசன் இல்லாத இந்த காலகட்டத்தில் கலப்பட பதநீர் விற்பனை நடைபெற்று வருவதாக தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியத்திற்கு மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதைத் தொடர்ந்து நாகசுப்பிரமணியம் பழைய குற்றாலம், குற்றாலம், பகுதிகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டார். பழைய குற்றாலம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் பதநீர் சீசன் இல்லாத காலகட்டத்தில் எப்படி பதநீர் வருகிறது என அங்கு விற்பனையில் ஈடுபட்ட பதநீர் வியாபாரிகளிடம் கேட்டார் அதற்கு அவர்கள் மழுப்பலாக பதில் சொல்லவே அனைத்தும் சுண்ணாம்பு கற்கள் கொண்டு பதநீர் செயற்கையாக கலப்பட முறையில் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டு அந்த பதநீர் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.
 மேலும் பதநீர் குடிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளிடம் தற்பொழுது பதநீர் சீசன் இல்லாத காலகட்டத்தில் இதுபோன்று கலப்பட விற்பனையில் ஈடுபடும் நபர்களிடம் பதநீர் குடிக்க வேண்டாம் என்றும் அதிகாரி எச்சரித்தார் மேலும் அந்தப் பதனி வியாபாரிடம் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு பதநீர் விற்பனை செய்வதும் அவர் கண்டறிந்து அதனையும் கொட்டி அளித்தார் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் என்பதால் தற்பொழுது பதநீர் சீசன் இல்லாததால் பொதுமக்கள்,பயணிகள் யாரும் பதநீர் வாங்கி குடிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 

 

Tags : சுற்றுலா பயணிகளை குறிவைத்து பதநீர் சீசனே இல்லாத காலகட்டத்தில் கலப்பட பதநீர் விற்பனை.

Share via