வழிப்பறி திருடனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

by Admin / 06-08-2021 02:35:13pm
வழிப்பறி திருடனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்


   
போலீஸ் விசாரணையில் அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாத் பஸ்வான் மகன் சோட்டிலால் பஸ்வான் (36) என்பதும் பணத்தை திருடி தப்பிக்க முயன்றதும் தெரியவந்தது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்  சோகன் மண்டல் ( வயது 35) .இவர் அவினாசியை அடுத்து தெக்கலூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நிர்மலாதேவி(30).  நேற்று  இவர் அவினாசி மேற்கு ரதவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் செலுத்த வந்துள்ளார்.

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மீது ரூ.1000 பணத்தை வைத்துவிட்டு தனது கைப்பையில் இருந்த  ஏ.டி.எம்., கார்டை எடுக்க முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபர் அந்த பணத்தை திருடிகொண்டு ஓடினார்.  பொதுமக்கள் சிலர் அந்த நபரை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாத் பஸ்வான் மகன் சோட்டிலால் பஸ்வான் (36) என்பதும் பணத்தை திருடி தப்பிக்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 

 

Tags :

Share via