தமிழ்நாட்டிற்கு தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? எய்ம்ஸ் வேண்டும் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

by Staff / 20-02-2024 02:46:45pm
தமிழ்நாட்டிற்கு  தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?  எய்ம்ஸ் வேண்டும் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர..தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via