கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.
குமரி முதல் சென்னை வரை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி தொடங்கி 61 நாட்கள் நீடிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என்று கருதி 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது
. குறிப்பாக,குமரி முதல் சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குமரி முதல் சென்னை கிழக்கு கடற்கரை யில் விசைப்படகுகள் மீன்பிடிக்க வருகிற 15-ந் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்படும்..
மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். இந்த இரண்டு மாத காலமும் மீன்வரத்து குறைவதால் மீன் விலை உயர்ந்து காணப்படும்.
Tags :