அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.

அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டில் காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.