புலி தாக்கி பெண் பரிதாப பலி
மகாராஷ்டிர மாநிலம் அஹேரி தாலுகாவில் உள்ள சிந்தல்பேட்டின் ஷிவாரா கிராமத்தில் வயலில் பருத்தி பறித்துக்கொண்டிருந்த பெண்ணை புலி ஒன்று நேற்று (ஜன.07) தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த பெண்ணின் பெயர் சுஷ்மா தேவிதாஸ் மண்டல் (55) என தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் இது இரண்டாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. புலி நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags :