விஷம் குடித்து மணமகன் பலி , மணமகளுக்கு சிகிச்சை
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணமகனை திருமணம் செய்து கொள்ளுமாறு மணப்பெண் பல நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணமகன் தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் மணப்பெண் அதனை மறுத்து போலீசில் புகார் அளித்துள்ளார். எனவே செவ்வாய்க்கிழமை திருமண ஏற்பாடுகளை செய்தனர். இந்த நிலையில், மணமகன் விஷம் குடித்த நிலையில், இதை அறிந்த மணமகளும் விஷம் குடித்துள்ளார். மணமகன் இறந்துவிட்ட நிலையில், மணமகள் உயிருடன் இருக்கிறார்.
Tags :