டெல்டா பிளஸ் தொற்று 40 ஆக உயர்ந்தது   மத்திய அரசு எச்சரிகை!

by Editor / 23-06-2021 05:14:19pm
டெல்டா பிளஸ் தொற்று 40 ஆக உயர்ந்தது   மத்திய அரசு எச்சரிகை!

 


டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு 
தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து செல்லும் திறன் கொண்டது என்றும் எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களாக இருந்தாலும் இந்த புதிய டெல்டா பிளஸ் வைரஸ் எளிதில் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இப்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via