மாணவர்களின் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பஸ்களின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்லும் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. கூடுதல் பஸ்களை இயக்கினால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே போக்குவரத்து துறை அமைச்சரிடம் மீண்டும் பேசி பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரத்தில் பயம் வரக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
Tags :