தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 29-05-2023 01:04:14pm
தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

குஜராத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கெடா மாவட்டத்தில் உள்ள கோப்லெஜ் கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதுமே புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via