மணமகளை அழைத்துவர சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து
ராஜஸ்தான் மாநிலம் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போழுது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இரவு நேரம் என்பதால் கார் விபத்துக்குள்ளானது குறித்து யாருக்கும் தெரியவில்லை என தெரிகிறது. வெகு நேரத்திற்கு பிறகு கார் விபத்து குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் விரைந்தனர். பின்பு, ஆற்றில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டனர்.
ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்த 9 பேரின் சடலங்களையும் எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மணமகன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :