கருப்பன் காட்டு யானை சிக்கியது

by Staff / 17-04-2023 12:52:18pm
கருப்பன் காட்டு யானை சிக்கியது

ஈரோடு தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை கருப்பன் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. இந்த யானையை பிடிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. இந்த யானைக்கு 5 முறை மயக்க ஊசி செலுத்தியும், அதை பிடிக்கும் பணி தோல்வியடைந்தது. இந்நிலையில் ஆறாவது முறையாக யானையை பிடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கருப்பன் யானை, மகராஜன்புரம் அருகேயுள்ள விவசாய தோட்டத்தில் புகுந்தது. அதனை இன்று அதிகாலை 5 மணி அளவில் ஓசூர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

 

Tags :

Share via