இலஞ்சி அகஸ்தியர் பீடத்தில் சசிகலா தியானம்
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு இலஞ்சி குமரன் ஆலயத்தில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா இன்று தரிசனம் செய்வதற்காக வந்தார்.அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்புக்களை அளித்தனர், பின்னர் இலஞ்சி குமரன் ஆலயத்தில் சுமார் 15 நிமிடம் சிறப்புதரிசனம் செய்த அவர் இலஞ்சி குமரன் ஆலயத்தை ஒட்டி அமையப் பெற்றுள்ள அகஸ்தியர் பீடத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார் பின்னர் பீடம் அமைந்துள்ள இடத்தை சுற்றி வலம் வந்த அவர் பீடத்தின் முன்பு அமர்ந்து சுமார் 15 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார்.பின்னர் அவர் புறப்பட்டு சென்றார்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக,மற்றும் அதிமுகவிலுள்ள சசிகலா விசுவாச தொண்டர்கள் வரவேற்ப்புக்களை அளித்தனர் .மேலும் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் சாலைகளில் அதிமுக கொடிக் கம்பங்களை நட்டுவைத்து அவருக்கு ஆங்காங்கே உற்சாகமாக செண்தை மேளம் முழங்க வரவேற்ப்பு அளித்தனர் .
Tags : Sasikala Meditation at Ilanchi Agasthiyar Peetha