ஆற்றில் குளித்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

by Staff / 17-04-2023 01:02:48pm
ஆற்றில் குளித்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் இனியவன் (12). ஏழாம் வகுப்பு பயின்று வரும் இனியவன், அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் மகன் சந்துரு (12) என்பவருடன் நேற்று மதியம் ஒரு மணி அளவில் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். நண்பர்கள் இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, இருவரும் தண்ணீரில் தவறி விழுந்து பலியாகினர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சிறுவர்கள் இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via