மசாஜ் சென்டரில் விபச்சாரம்: பெண் உள்பட 2 பேர் கைது

by Staff / 23-06-2024 12:43:19pm
மசாஜ் சென்டரில் விபச்சாரம்: பெண் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்-பல்லடம் ரோட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த சென்டருக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்து 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேலாளரான கோவை மதுக்கரையை சேர்ந்த பிரபு (24), பொறுப்பாளரான திருப்பூரை சேர்ந்த ஜெயா (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via