அமெரிக்க தலைநகரில் கட்டிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 04-01-2024 01:43:50pm
அமெரிக்க தலைநகரில் கட்டிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பல மாகாண தலைநகரங்களில் உள்ள கட்டிடங்களுக்கு நேற்று  வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தெரியாத மின்னஞ்சல் ஐடியில் இருந்து இந்த செய்திகள் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டதால், போலீசார் உடனடியாக கட்டிடங்களை காலி செய்தனர். மோப்ப நாய் படைகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அவை போலியான மிரட்டல்கள் என்று அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது. இருப்பினும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories