மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தவித தடையும் இருக்காது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

by Staff / 04-01-2024 01:37:51pm
மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தவித தடையும் இருக்காது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு தயார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். ஜன.09 முதல் போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories