பத்தாம் தேதி முதலமைச்சர் விஜய் கருவூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்தவித தடையும் இல்லை

by Admin / 07-07-2026 12:14:53pm
 பத்தாம் தேதி முதலமைச்சர் விஜய் கருவூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்தவித தடையும் இல்லை

கரூருக்கு வரும் பத்தாம் தேதி முதலமைச்சர் விஜய் சென்று கூட்ட நெரிசலில் இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க உள்ளார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பொது வழியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருவூரில் 41 பேர் இறந்ததற்கு திமுக காவல்துறையை வைத்து எங்கள் மக்களை பலியாக்கி விட்டார்கள் என்று பேசியதற்கும் தடை விதிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ச்சி இருந்தது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது மனுவில் முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சர் விஜயின் பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படாத நிலையில் எப்படி அவரை அக்யூஸ்ட் என்று சொல்லலாம் என்றும் அரசியல் மேடையில் பேச வேண்டிய கருத்துக்களை நீதிமன்றத்தில் வைத்துக் கொள்வது நல்லது அல்ல என்றும் முதல் தகவல் அறிக்கையை படிக்காமல் நீதிமன்றத்தில் பேசுவதை மூலம் இந்த மனுவை தள்ளுபடி செய்ய முடியும் என்று நீதிபதிகள் கூறியதை அடுத்து திமுக தரப்பிலிருந்து இந்த மனு திரும்ப பெறப்பட்டது. அமைச்சர்கள் பொது வெளியில் பேசுவதை அவதூறுவழக்காகத் தொடுக்கலாம் என்று கூறி இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்பட்ட இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் காரணமாக, வரும் பத்தாம் தேதி முதலமைச்சர் விஜய் கருவூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்தவித தடையும் இல்லை என்பதால் தமிழக அரசு திட்டமிட்டபடி கரூர் நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo