கணவர் இறந்த துக்கத்தில் உயிரிழந்த மனைவி

by Staff / 16-07-2023 12:51:35pm
கணவர் இறந்த துக்கத்தில் உயிரிழந்த மனைவி

கள்ளக்குறிச்சி மூங்கில்துறைப்பட்டு அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 65), இவரது மனைவி லட்சுமி (வயது 55). கடந்த சில நாட்களாக சின்னதம்பி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜூலை 13 ஆம் தேதி அன்று சின்னத்தம்பி உயிரிழந்தார். கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் அழுது கொண்டே இருந்த மனைவி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

Tags :

Share via