பிரதமர் பேரணியில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ்

by Staff / 07-05-2023 12:37:20pm
பிரதமர் பேரணியில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ்

கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பெங்களூருவில் சனிக்கிழமை பிரம்மாண்ட சாலைப் பேரணி நடத்தினார். சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைப் பேரணியின் போது ஆம்புலன்ஸ் ஒன்று நெரிசலில் சிக்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 'சாலைப் பேரணி காரணமாக, சாலையில் குழப்பம் நிலவுகிறது. ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது. பிரதமருக்கு பொறுப்பு இருந்தால், அடுத்த ரோட் ஷோவை ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

Tags :

Share via