கன்வார் யாத்திரையில் சோகம்..5பேர் பலி

by Staff / 16-07-2023 12:47:55pm
கன்வார் யாத்திரையில் சோகம்..5பேர்  பலி

கன்வார் யாத்திரையில் பெரும் அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. ஹரித்வாரில் புனித நீர் ஏற்றிச் சென்ற கன்வாரியாலாவின் வாகனம் மீது 11 கேவி உயர்மின்னழுத்த மின்கம்பி உரசியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 5 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியமே இச்சம்பவத்திற்கு காரணம் எனக் கூறி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியால் இந்த விபத்து நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via