டாஸ்மாக் கடையிலிருந்து 62 மது பாட்டில்கள் திருட்டு

by Staff / 16-07-2023 12:44:22pm
டாஸ்மாக் கடையிலிருந்து 62 மது பாட்டில்கள் திருட்டு

கோவை ஆவாரம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து 62 மது மதுபாட்டில்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி (வயது 43) இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது ரூ.10 ஆயிரத்து 400 மதிப்புள்ள 62 மதுபாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories