ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளது...  சோனியா.

by Admin / 20-11-2021 08:15:21pm
 ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளது...  சோனியா.

 

 ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளது சோனியா.

3 புதிய வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதன் மூலம் சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.நேற்று  மக்களிடையே உரையாற்றிய மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக , விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி ,', நீதிக்கான போராட்டத்தில்  இன்னுயிரை ஈத்த 700க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் தியாகங்களுக்கு பலன் கிடைத்துள்ளதாகவும், இன்று உண்மையும், நீதியும், அகிம்சையும் வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 

 

Tags :

Share via