ஆந்திர முதல்வரின் தங்கை வேட்பு மனுத்தாக்கல்
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனது அண்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனிக்கட்சி தொடங்கிய அவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் கட்சியை இணைத்தார். கட்சியில் சேர்ந்த அடுத்த நொடியே மாநில தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு கடப்பா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தந்தையின் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து ஆசி வாங்கிய பின்னர், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
Tags :