கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது

by Staff / 17-09-2023 01:52:51pm
கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது

சென்னை, சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் அருகே சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக மாத்திரைகள் வைத்திருந்த சூளைமேடு பகுதியைச் சோந்த விதகுமாா் (எ) விதன் (24), சூா்யா பிரகாஷ் (எ) ஸ்கெட்ச் சூா்யா (23), அரும்பாக்கத்தை சோந்த அப்துல்ஜாவித் (22) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1, 305 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் அடையாா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் சைதாப்பேட்டை கலைஞா் நுழைவு வாயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சோந்த ஜெகன் (23) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளில் தொடா்புடைய 4 பேரும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதற்கிடையே பாட்னாவிலிருந்து போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகள் வரவழைத்த ஆய்வகஉதவியாளா் பாலாஜி பாபு (24) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

 

Tags :

Share via