பெற்ற தாயை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது

by Staff / 14-04-2023 01:19:30pm
பெற்ற தாயை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே வாட்டாகுடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பானுமதி(65). இவர்களுடைய மகன் முருகானந்தம்(வயது37). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முருகானந்தத்திடம் இருந்து அவரது மனைவி பிரிந்து குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். தந்தை சுப்பிரமணியன் இறந்து விட்டதால் முருகானந்தம் தனது தாய் பானுமதியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த முருகானந்தம், தாயார் பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர், உருட்டுக்கட்டையால் தனது தாயாரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

 

Tags :

Share via