டெல்லி மதுபான உரிமம் முறைகேடு: 11 கலால்வரி அதிகாரிகளுக்கு சம்மன்

by Editor / 23-08-2022 02:57:53pm
டெல்லி மதுபான உரிமம் முறைகேடு: 11 கலால்வரி அதிகாரிகளுக்கு சம்மன்

மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. கலால் வரி கமிஷனர் அர்வா கோபி கிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி உதவி கமிஷனர் பங்கஜ் பட்னார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்து இருந் தார். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

 

Tags :

Share via