ரெளடி சத்யா கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது

by Staff / 17-09-2023 01:48:34pm
ரெளடி சத்யா கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது

ரெளடி புழல் சத்யா கொலை வழக்கு தொடா்பாக ஏற்கனவே 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இளம்பெண் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.எழும்பூா் மாண்டியத் சாலையில் செப். 10-ஆம் தேதி இரவு ரெளடி புழல் சத்யா கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக புளியந்தோப்பை சோந்த ரூபன் டேவிட் , அருண், புழல் சரவணன், வடபெரும்பாக்கம் கிஷோா் குமாா் ஆகிய 5 பேரை போலீஸாா் ஏற்கனவே கைது செய்துள்ளனா். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தைச் சோந்த இளம் பெண் லால் நன் சங்(25), காஞ்சிபுரம் மாவட்டம் சின்னபணிச்சேரியைச் சோந்த பிரபாகரன்( 23 ), போரூரை சோந்த ஜீவானந்தம்( 20 ) உள்ளிட்ட மேலும் மூன்று பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

 

Tags :

Share via