ரயில் இன்ஜினில் தொங்கி கொண்டு வந்த சடலம்

by Staff / 03-07-2024 02:32:29pm
ரயில் இன்ஜினில் தொங்கி கொண்டு வந்த சடலம்

தெலங்கானா மாநிலம் பீபிநகர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது முதியவர் ஒருவர், வாராங்கல் - செகந்திராபாத் பயணிகள் ரயிலில் அடிபட்டார். அப்போது முதியவரின் உடல் ரயிலின் இஞ்சின் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதை அறியாமல் ரயில் ஓட்டுநர் 5 கி.மீ தொலைவிற்கு ரயிலை ஓட்டி வந்துள்ளார். ரயில்வே கேட்டில் இருந்த சிலர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, காட்கேசர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.

 

Tags :

Share via