இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. அதிர்ச்சி தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் போக்குவரத்திற்கு ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிப்ரவரி முதல் இந்தியாவில் விலை உயர்த்தப்படாமல் அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், விலை உயர்வு என்பது தவிர்க்கமுடியாததாகலாம் என கூறியுள்ளார்.
Tags :



















