லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து.. 4 பேர் பலி

by Editor / 20-05-2025 01:19:07pm
லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து.. 4 பேர் பலி

தெலங்கானா: விக்காராபாத் மாவட்டத்தில் சாலையில் நின்றிருந்த லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 60 பேர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via