அமைச்சர் மீது தாக்குதல் -25 பேர் கைது.

by Editor / 17-10-2022 09:30:00am
அமைச்சர் மீது தாக்குதல் -25 பேர் கைது.

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசாரும் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஜனசேனா கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். காவல்துறை பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், அமைச்சர்களை கொல்ல முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via