குப்பை பற்ற வைத்த போது தீப்பிடித்து பெண் பலி

by Staff / 06-04-2023 02:48:35pm
குப்பை பற்ற வைத்த போது தீப்பிடித்து பெண் பலி

கோவை சின்னவேடம்பட்டி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மனைவி விருமாய் (36 ) கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே இருந்த குப்பைகளை குவித்து தீ பற்ற வைத்தார்.அப்போது எதிர்பாராத விதமாக சொந்த சேலையில் தீ பிடித்தது. இதை பார்த்த இவரது மகன் தீயை அணைக்க முயற்சி செய்தார். அதில் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பெற்று வந்த விருமாயி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via