நடுரோட்டில் காருக்கு தீ வைப்பு
மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு கோரி கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை வன்முறை சம்பவங்கள் நடந்தன. அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புலம்ப்ரி தாலுகாவின் கெவ்ராய் பாகாவின் சர்பஞ்ச் மங்கேஷ் சபாலே, போலீஸ் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது காரை தீ வைத்து எரித்தார். ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய காரை தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தினார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் வித்தியாசமாக பதிலளித்து வருகின்றனர்.
Tags :