தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்முதலமைச்சராகிறாா்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் உடைய ஆதரவு கடிதத்தோடு ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து சால் அணிவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நேரில் சென்று மலர் கொத்து கொடுத்து அவரை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஷால் அணிவித்தனர். விஜய்யும் அவருக்கு கால் அணிவித்து மரியாதை செய்ததோடு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவரோடு பொதுச் செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட உடன் சென்றனர். இதனைத் தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் தகவலை அடுத்து எப்பொழுது பதவி ஏற்பார். எந்த நேரத்தில் ஏற்பார் என்கிற அறிவிப்பு வெளியாகும்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இந்த முறை ஆளுநரை சந்திக்கும் பொழுது தன்னுடைய வழக்கமான பேண்ட் அணியாமல் ஊதா கலர் ஜீன்ஸ் பாண்ட் வெள்ளை சட்டை, கையில் சிவப்பு கயிறு நெற்றியில் குங்குமம் சகீதமாக காணப்பட்டார்.
Tags :



















