டெல்லியில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி
தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன.
தமிழகத்தில் இன்னமும் திரையரங்குகள், மதுபான பார்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. இதனிடையே டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகளுடன் டெல்லியில் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்.
மேலும் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இருக்கைகளுடன் இயங்கவும் டெல்லி அரசு அனுமதி அளித்திருக்கிறது.
Tags :