8 சிறுத்தைகள் இன்று இந்தியாவிற்கு வருகை

by Staff / 17-09-2022 12:08:43pm
8 சிறுத்தைகள் இன்று இந்தியாவிற்கு வருகை

நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இன்று இந்தியாவிற்கு வருகை
ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியாவில் இந்த இனம் 1952இல் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அரசு அறிவித்தது.

அதிகமாக வேட்டையாடுவதால் சிறுத்தைகள் முற்றிலுமாக அழிந்தன. இந்தியாவில் கடைசி சிறுத்தை 1947இல் இறந்தது. இந்த ஆண்டு ஜூலை 20 அன்று நமீபியாவில் இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் ஐந்து பெண் சிறுத்தைகளும் மூன்று ஆண் சிறுத்தைகளும் இந்தியாவிற்கு வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் குனோ தேசிய பூங்காவில் இவை திறந்துவிடப்படவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, நமீபியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சிறுத்தைகள் கொண்டுவரப்படுகின்றன.

நமீபியாவில் இருந்து இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் விமானம் இன்று காலை குவாலியர் வந்தடையும். அங்கிருந்து விமானப்படைக்கு ஹெலிகாப்டரில் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

 

Tags :

Share via