மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி ஆசிரியை

by Staff / 04-05-2023 12:08:15pm
மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி ஆசிரியை

திருச்சி மாவட்டம்  உப்பிலியபுரத்தை சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூரில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். இந்நிலையில் அவரிடம் டியூசன் படித்த 10ஆம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அப்போது இரவு நேரங்களில் மாணவன், ஆசிரியையுடன் அதிக நேரம் பேசி வருவதும், அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியை கைது செய்தனர்.

 

Tags :

Share via